சோமசுந்தரம் குடும்பமும் தலகாசி தமிழ்ச் சங்கமும் [ English Version]

வருடம் 2000-த்தை தலகாசி தமிழ்ச் சங்கத்தின் ஆரம்பமாகக் கருதலாம். அந்த வருடம் திருமதி மற்றும் திரு முத்துசுவாமி அவர்களும், பானுவும், நானும் தலகாசியில் வாழும் தமிழ் நண்பர்களையும் அவர்களின் குடும்பத்தோரையும் ஒன்றாக் கூட்டினோம். அன்று மாலை நேரத்தில் இந்தியா, மலேசியா, சிங்கபூர், மற்றும் இலங்கை தமிழ் நண்பர்கள் பலர் திரு முத்துசுவாமி அவர்களின் இல்லத்துக்கு வந்து இருந்தனர். அப்போழுது திரு முத்துசுவாமி அவர்கள் ஏல்லோரிடமும் ஒரு விண்ணப்பம் அளித்தார். அதன் படி பானுவும் நானும் தலகாசி தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்க தேவையான வேலைகளைத் தொடங்கினோம்.

2000‍ முதல் 2003 வரை எங்கள் கூட்டங்கள் பொதுவாக தமிழ் நண்பர்களையும் அவர்களின் குடும்பத்தோரையும் பார்த்து பேசுவதும், பழகுவதும், உணவு அருந்துவதுமாக இருந்து வந்தது. 2004-வது வருடம் சனவரி மாதத்தில் திருமதி உஷா அவர்கள் 5-தலகாசி வாழ் குழந்தைகளுக்கு தமிழ்ப் பாடம் சொல்லித் தர ஆரம்பித்தார்கள். ஒவ்வோரு ஞாயிற்று கிழமையும் மணி 3 முதல் 4 வரை அவர்கள் தமிழை எழுதவும், படிக்கவும், பேசவும், மற்றும் உச்சரிக்கவும் சொல்லிக் கொடுத்தார்கள். தமிழ்ப் பள்ளி 2006 வரை நல்ல முறையில் நடந்தது. 2006-ல் திருமதி உஷா சந்திரா மற்றும் திரு நமா சந்திரா அவர்களும் வேறு ஒரு ஊருக்கு மாறிப் போகவே தமிழ்ப் பள்ளி முடிவுற்றது. ஆனால் அவர்கள் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மறக்கவில்லை. கடந்த பல வருடங்களாக தலகாசி தமிழ் சங்கத்தின்மூலமாக பல கலை நிகழ்ச்சிகளை நாங்கள் நடத்தி வந்துள்ளோம். இந்த நிகழ்ச்சிகளில் சிறுவர்கள், சிறுமிகள், மற்றும் பெரியவ‌ர்கள் பங்கு கொண்டு இருக்கிறார்கள். தமிழ் கற்றுக் கொண்ட சிறுவர்களும் மற்றும் சிறுமிகளும் தலகாசி இந்திய சங்கத்தின் ( India Association of Tallahassee | IATLH நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டுள்ளார்கள். இதுவரை தமிழ் கற்று கொண்ட தலகாசி சிறுவர்களும் மற்றும் சிறுமிகளும் ஆத்திசூடி , தமிழில் கதை சொல்லுதல் , மகா கவி பாரதியாரின் " ஒளி படைத்த கண்ணினாய் வா! வா! " பாட்டு, " போலிக்கு தண்டனை " நாடகம், " தெனாலி இராமன் " நாடகம், மற்றும் பல நிகழ்ச்சிகளில் பங்கெற்றுள்ளுனர்.

2007 முதல் தமிழ் விழாவில் பங்கு கொள்ளுவர்களின் எண்ணிக்கை அதிரிக்கவே, தமிழ் விழாவைப் பொது இடத்தில் நடத்தி வருகிறோம்.

மேலும் > >

வடிவமும் உரிமையும் © 2008-15 தாயுமானசாமி சோமசுந்தரம்.